சனி, 29 நவம்பர், 2008

ஸாராவின் புன்னகை ( Children of Heaven)


இமானும் ஸாராவும் அண்ணன் தங்கை. அவர்களின் அப்பா கார்பெட் நெய்யும் தொழில் செய்து வந்தார். ஒரு அறை கொண்ட வீட்டில் அவர் ஒரு பக்கம் கார்பெட் நெய்யும் பட்டறை வைத்து வேலை பார்த்து வந்தார்.


அவரது வருமானம் அதிகம் இல்ல ஆனாலும் ஸாராவும் இமானும் நல்ல பணக்கார ஸ்கூல்ல படிச்சாங்க. ரெண்டு பேரும் தினமும் ஒன்னா ஸ்கூலுக்கு போவாங்க. அத பாக்க ரொம்ப அழகா இருக்கும். ஸாரா இமான் விரல பிடிச்சுகிட்டு ஸ்கூலுக்கு போகும். தினமும் ஒரு கதை பேசிட்டு போவாங்க. அய்யோ எவ்ளோ பெரிய வானம், ஏன் இந்த வானம் நீல கலர்ல இருக்கு, ஏன் இவ்ளோ மணல் இங்க ஏன் போட்டு இருகங்கனு ஸாரா எப்போதும் ஏதோ கேட்டுட்டே இருக்கும். அதுக்கு இமான் ம்ம் ஒ சரின்னு ஏதோ பதில் சொல்லிட்டு வருவான். சில நேரம் ஸாராவ தூக்கிட்டு நடப்பான், சில நேரம் நடக்க வைச்சு கூட்டிட்டு போவான். ஆனா எப்போவும் ஸாரா இமான் விரல விட்டதே இல்ல. சில நேரம் தூங்கும் போது கூட விரல பிடிச்சுகிட்டே தூங்கும். ஸாரா இமான விட்டு பிரிஞ்சதே இல்ல.

ஆனா இமான் எங்கயும் விளையாட போகும் போது ஸாராவ ஏமாத்திட்டு விளையாட போவான். ஆனா பல நேரம் ஸாராவ கூட்டிட்டு தான் விளையாட போக வேண்டி இருக்கும். ஆனா நாளைலருந்து இமானோட 7th classலருந்து வேற இடத்துக்கு மாத்துறாங்க. அதுல ரெண்டு பேருக்கும் ரொம்ப வருத்தம். ஸ்கூல் முடிஞ்சி வீட்டுக்கு வர வழில

ஸாரா: நாளைக்கு என்ன ஸ்கூலுக்கு வந்து விடுவல்ல.
இமான்: ம்ம்
ஸாரா: வரேன்னு சொல்லு.
இமான் : வரேன் வரேன்.

அப்போ ரொம்ப பசங்க ஒரு குன்று மேல பட்டம் விட்டுட்டு இருந்தாங்க. உடனே

ஸாரா : நாமளும் அங்க போகலாமா.
இமான் : ம்ம் போகலாம். நம்ம ரெண்டு பேரும் வீட்டுக்கு போய் bag வைச்சுட்டு நம்ம பட்டம் எடுத்துட்டு வந்துடுலாம்.
ஸாரா: வேண்டாம் , நாம இப்போ சும்மா கொஞ்ச நேரம் பாத்துட்டு போகலாம். இமானும் ஸாராவும் குன்று மேல நோக்கி போனாங்க. கொஞ்ச நேரம் வேடிக்கை பாத்துட்டு வரும்போது ஸாராவோட shoe ரெண்டு கல்லுக்கு நடுல மாட்டிக்கிச்சு. கால எடுக்கும்போது shoe கழண்டு விழுந்துடுச்சு. இமான் எவ்வலவோ try பண்ணியும் அந்த shoeவ எடுக்க முடியல. பாவம் ஸாரா அழ ஆரம்பிச்சுடுச்சு. ரொம்ப நேரம் try பண்ணி முடியாம ரெண்டு பேரும் வீட்டுக்கு நடக்க ஆரம்பிச்சாங்க.


கொஞ்ச தூரம் ஸாரா அழுதுகிட்டே வந்துச்சு.
அப்புறம் இமான் ஸாராவ தூக்கிட்டு நடக்க ஆரம்பிச்சான்.


இமான் : ஸாரா shoe இல்லன்னு அப்பா கிட்ட சொல்லாத. இன்னும் கொஞ்ச நாள்ல நான் உனக்கு வாங்கித்தரேன்.

ஸாரா: உனக்கு எப்படி பணம் கிடைக்கும்.

இமான்: எனக்கு இனி தினமும் மதியம் தான் ஸ்கூல். நான் காலைல எதாவது வேலை பாத்து shoe வாங்கிடலாம்.

ஸாரா: ம்ம்ம்ம்னு சொல்லிடே இமான் தொள்பட்டைல தூங்கிடுச்சு.

ஸாராவ வீட்டுல விட்டுட்டு, கடைத்தெருக்கு நடக்க ஆரம்பிச்சான் அங்க ஒரு கடைல பட்டம் வித்துட்டு இருந்தாங்க. இமானுக்கு நல்லா பட்டம் செய்யவும் விடவும் தெரியும். அவன் அந்த கடைல வேலை கேட்டான். கிடைக்கல. பட்டம் விக்கும் கடையை தேடி வேலை கேட்டான். ஒரு கடைல அவனுக்கு வேலை கிடைச்சது. காலைல மட்டும் தான் வேலை . இமானுக்கு ரொம்ப சந்தோசம்.. வீட்டுக்கு வந்து எப்போதும் போல படிச்சுட்டு தூங்கிட்டான்.

அடுத்த நாள் ஸாராவ தூக்கிட்டு ஸ்கூலுக்கு போனான், ரெண்டு பேரும் எப்போதும் போல ரெண்டு பேரும் கதை பேசிட்டு போனாங்க. ஸாராவ shoe இல்லாம ஸ்கூலுக்குள்ள விடல. இமானுக்கும் shoe இல்லாம அவன் ஸ்கூல்ல விட மாட்டாங்க. அவனுக்கு மதியம் ஒரு மணி வரை வேலை 1.30 க்கு ஸ்கூல். ஸாராவுக்கு ஒரு மணி வரை ஸ்கூல். அறை மணி நேரத்துல இமான் வந்து shoe வாங்கிட்டு அவன் schoolக்கு போகணும்.
ஒன்னும் புரியாம, அவனோட shoeவ ஸாராக்கு போட்டு விட்டான். ஸாராகிட்ட ஒரு இடம் சொல்லி, அங்க ஸ்கூல் முடிஞ்சி வந்திடுன்னு சொல்லிட்டு வேலைக்கு போய்ட்டான். அந்த பெரிய shoeவ தர தரன்னு இழுத்துட்டு ஸாரா நடந்து போச்சு.
இமான் இன்னைக்கு 50 பட்டம் செய்தான். இன்னும் 2 நாள்ல அவனுக்கு shoe வாங்க பணம் கிடைச்சிடும். வேலை முடிஞ்சி ஸாராவ வரச்சொன்ன இடத்துக்கு ஓடினான். ஸாரா பெரிய shoe போட்டு நடக்க முடியாம அத கைல எடுத்துகிட்டு அழதுகிட்டே அந்த இடத்துல நின்னுகிட்டு இருந்துச்சு, இமான் ஸாராவ சமாதனம் செய்ய try பண்ணி , முடியாம ஸாராவ தூக்கிட்டு வீட்டுக்கு நடந்தான். அப்போ

ஸாரா: என்னால முடியல, இன்னைக்கு அப்பாகிட்ட சொல்லிடலாம். காலஎல்லாம் வலிக்குது.

இமான்: வேண்டாம், இன்னும் ஒரு நாள் ,நாம shoe வாங்கிடலாம்.

ஸாரா: இன்னும் ஒரு நாள், ம்ம் சரி.

இமான்: வீட்டுக்கு போய் நீ தூங்கு, நான் ஸ்கூல் போயிட்டு வரேன். அப்பாகிட்ட சொல்லிடாத, சரியா. அப்பாகிட்ட இப்போ பணம் இல்ல, நாமலே இத சரி பண்ணிக்கலாம். சரியா.

ஸாரா: ம்ம்ம்ம்னு சொல்லிட்டே இப்போவும் தூங்கிடுச்சு.

ஸாராவ விட்டுட்டு ஸ்கூலுக்கு போன போது இன்னைக்கு அவனோட ஸ்கூல்ல ஓட்டபந்தயம், அதுக்கு பரிசு ஒரு shoe னு தெரிய வந்தது. இமான் எதுவும் யோசிக்காம அவனோட பேரு கொடுத்தான், வீட்டுக்கு போய்ட்டு ஸாராவ கூட்டிட்டு வந்தான், வரும்போது ,

ஸாரா: எப்போ பந்தயம்

இமான்: நாலு மணிக்கு.

ஸாரா: ஜெய்ச்சிடு.
இமான்: ம்ம்,

இமான் ஓடுறதுக்கு நின்னுட்டு இருந்தான், ஸாரா பந்தயம் முடியுற இடத்துக்கு போய் நின்னுகிச்சு . பந்தயம் தொடங்கினப்போ , எல்லாரும் அவங்க friends பேரச்சொல்லி கத்தினாங்க. ஸாரா மெதுவா இமான் ஜெய்ச்சிடுனு சொல்லிட்டே இருந்துச்சு. ஸாரா சொன்னது தான் நடந்தது. இமான் shoeவ ஸாராவுக்கு போட்டு விட்டான். ரெண்டு பேரும் வீட்டுக்கு எப்போதும் மாதிரி கதை பேசிட்டு போனாங்க. கொஞ்ச நேரத்துல ஸாரா அந்த shoeவ கழட்டி கைல எடுத்துட்டு நடக்க ஆரம்பிச்சது, ஸாரா மனசுல என்ன நினச்சு இருக்கும்னு இத படிக்குற எல்லாத்துக்கும் புரியும்.




இப்படிக்கு

ரமேஷ்.

வியாழன், 30 அக்டோபர், 2008

வெள்ளித்திரையும் சின்னத்திரையும்:

நண்பா
ஞாபகம் இருக்கா உனக்கு? ஸ்கூல் நாட்கள்ள, நாம எப்படி இருந்தோம்னு.

யாராவது ஏன்டா இந்த மொட்டை வெயில்ல ஆடிட்டு இருக்கீங்கனு கேட்டா, டேய் உன் வேலைய பாருடனு சொல்லாம சொல்லிட்டு விளையாடிட்டு இருப்போம்.
திச்சுடரை விரல் தீண்டும் இன்பம் தாராயோனு பாரதி சொன்னார்.
நமக்கு அப்போ அந்த சித்திரை வெயில்ல ஆடுறது தான் jolly இல்ல.
அந்த வெயில் நம்மள ஒன்னும் பண்ணதே இல்லல. அந்த வெயில் நம்மள கருப்பாக்குட ஆக்கினது இல்ல.

பூரா சிசனுக்கு ஒரு விளையாட்டுனு ஆடிட்ட்டு இருந்தோம்.
கோலில ஒருத்தன் , பட்டம் விட ஒருத்தன் , கில்லில ஒருத்தன்னு நமுக்கு போட்டியா எல்லாத்துலையும் நமக்கு ஒரு வில்லன் இருந்தான்ல.

தமிழ் ஸ்கூல் பசங்களுக்கும் இங்கிலீஷ் ஸ்கூல் பசங்களுக்கும் பூட்பால் match அப்போ ,அவனுங்க விளையாடும்போது forword வா , defend பண்ணு என்னமோ சொல்லி நம்மள கடுப்பேத்துவாங்க, இருடி மகனேன்னு பந்தோட சேத்துவச்சு ஒரேயடி , அவன GOUND க்கு வெளில உட்கரவச்சுட்டு , அடுத்து யாருன்னு நாம ரெண்டு பேரும் கண்ணால பேசிப்போம் இல்ல.
நாம வாடகை சைக்கிள்ளே கொரங்குபெடல் கத்துகிட்டப்போ, பொங்கல் சைக்கிள் பந்தயத்துல நாமளும் ஓட்டலாம்னு சைக்கிளுக்கு அலைஞ்சி , கிடைக்காம கடைசில பெரிய பசங்க தம் அடிக்குற பாலகட்டைல உட்கார்ந்து கடுப்புல சைக்கிள் ரேஸ் பாத்தோம். அந்த ரேஸ்ல முதல் வந்தவன் நம்மள கிராஸ் பண்ணும்போது, மகனே அடுத்த பொங்கலுக்கு உன்ன நாங்க அடிப்போம்டனு கட்ட விரல உயர்த்தி challenge பண்ணோம் ஞாபகம் இருக்கா?.

முழுப்பரிட்சை லீவுல , நைட் ரொம்ப நேரம் கிரௌண்ட்ல உட்கார்ந்து வெட்டி கதை பேசிட்டு இருப்போம் , அப்போ ஒரு நாள் நான் ஏதோ புக்குல , அமெரிக்கா நிறைய sattelite வானத்துல நிறுத்தி வைச்சு இருக்கனாம்னு நான் சொல்லிட்டு இருந்தேன்.

நீ : எதுக்குடா
நான் : தெரியல டா , அந்த புக்குல அது பத்தி ஒன்னும் சொல்லல .
நீ : அவன் எதுக்குடா நம்ம நாட்டு மேல நிக்க வைச்சு இருக்கான், அது விழுந்தா நம்ம மேல தான விழும்.
நான்: அப்படியா, actually அது எப்படிடா அங்க நிக்குது.
நீ : flight மாதிரி தான், நிறைய பெட்ரோல் போட்டு இருப்பாங்க.
நான்: flight வெடிக்குமே அது மாதிரி அது வெடிச்சா?
நீ : மேல வெடிச்சா , இந்தியாலையும் வெடிக்கும்.
நான் : அத ஏன்டா நம்ம நாட்டுல நிப்பாட்டி வைச்சு இருக்கான்.
நான் ரொம்ப tensiona ஆகிட்டேன். அன்னைக்கு நீ சொன்ன விஷயம் தான் இப்போ வரை எனக்கு அமெரிக்கா பிடிக்காம வைச்சு இருக்கு. ( இனி இப்படி யாருக்கிட்டையும் பொய் சொல்லாத).

இன்னைக்கு அந்த கிரௌண்ட்ள விளையாட ஆள் இல்லை, இப்போலாம் எல்லா பசங்களும் டிவி முன்னாடி மட்டும் தான் உட்காந்து இருக்காங்க. கண்ணுல சோடா புட்டீயும் , கைல ரிமோட்டும் தான் இப்போ எல்லா பசங்களுக்கும்.இப்போ இருக்க பசங்களோட லீவு எல்லாம் சின்னத்திரையும் வண்ணத்திரையும் எடுத்துகுச்சு.
அதுலயாவது அவனுங்க புத்திய வளத்துக்கிட்டா சரிதான் .
அப்போ நமக்கு சன் ராஜ் விஜய் டிவி இல்ல. நாம தப்பிச்சோம்.



திங்கள், 27 அக்டோபர், 2008

இன்றைய கனவில்

நாள் செப்-ஏழாம் நாள் , இரவு ஒன்பது முப்பது மணி

இன்று சீக்கிரம படுக்கைக்கு வன்துட்டேன். ரொம்ப tireda இருக்கு. இன்னைக்கு
காலைல எட்டு மணிக்கு தான் எழுந்தேன். எழுந்த உடனே நேற்றைய இரவு கண்ட கனவு மனசுக்குள் அப்படியே இருந்தது. அந்த கனவு என் பள்ளி காலத்து நண்பனை கொண்டது .என் பள்ளி காலத்து வினோத் . கொஞ்சம் மன வளர்ச்சி குறைந்த பயன். என்னோட நாலாம் கிளாஸ் வரை படிச்சான். நான் இப்போ யோசிக்கும் போது நான் நாலாம் கிளாஸ் படிக்கும் போது அவனுக்கு மூணு இல்ல நாலு வயசு வளர்ச்சி தான் இருக்கும். அவனால தனியா ஸ்கூலுக்கு போக முடியாது. நானும் என் நண்பனும் தினமும் அவன் வீட்டுக்கு போய் அவன கூட்டிட்டு போவோம .அப்போ ஒரு சில நாள் அவன் தனியா எங்கயும் போயிடு வந்தா அத எல்லார்டையும் பெருமையா சொல்லுவோம் . அப்போ நாங்க விளையாடுற எல்லா விளையடுளையும் அவன் இருப்பான். ஆனா அவனுக்கு எங்க விளையாட்டும் புரியாது, வேகமா ஓடவும் முடியாது. அப்போ எங்களுக்கும் அவனுக்கு எந்த விளையாட்டு முடியும்னு தெரியாது.இருந்தாலும் எல்லா விளையடுளையும் அவனை தான் ஜெய்க்க வைப்போம். என்னோட படிச்ச யாரும் அவன அடிக்க திட்ட மாட்டங்க. அவனுக்கும ஒரு மனசு இருந்தது. அவனுக்கும் பிடிச்ச பிடிக்காத விஷயங்கள் இருந்தது. அவனுக்கு இங்கிலீஷ் கிளாஸ் பிடிக்காது . அவனுக்கு பகுத்து பார்க்க முடியாத நிறைய விஷயங்கள் அவன சுத்தி இருந்தது. ஆனா அவனுக்கு சாப்பிட கிடைச்சா அத எல்லாருக்கும் பிரிச்சு கொடக்கனும்னு அவனுக்கு மனசு இருந்துச்சு. அவனோட அம்மா சொல்லி கொடுத்து இருந்தாங்க . அவனுக்கு சரியா எழத படிக்க முடியாது. எல்லா வீட்டு பாடதயும் அவன் அம்மா அவன் கைய பிடிச்சு எழுத வைப்பாங்க. அத கிளாஸ் டீச்சர் சில நேரம் கண்டு பிடிச்சு அவன் அடிப்பாங்க. அவனுக்கு நடந்த விஷயங்கள் எல்லமே அவன் மேல திணிக்க பட்டதாதான் இருந்தது. அவனோட நிலைமைக்கு ஏத்ததா இல்ல. எல்லாருமே அவன் மத்தவங்க மாதிரி சீக்கிரம் ஆகிடனும்னு நினைச்சாங்க. ஆனா அவனோட எல்லை எதுநு மருத்துவ பார்வைல பார்த்தா , அது எதுமே அவன் கைல இல்லைன்னு தெரியும். ஆனா இத யோசிகுற அளவுல அப்போ அவனோட ஸ்கூலும் வீடும் இல்ல.

என்னோட ஆறாம் கிளாஸ்ல நான் டவுன்ல ஒரு ஸ்கூலுக்கு படிக்க போய்ட்டேன். என்னோட மேல் படிப்பு வேலைனு நான் ரொம்ப காலம் வெளியூர், வெளிநாடுநு போயிட்டேன் . உண்மைய சொன்னா நான் எல்லாத்தையும் மறந்துட்டேன். நேற்றைய கனவு தான் இத எல்லாத்தயும் மறுபடி ஒட்டி பாக்க வைச்சது.

நேற்றைய கனவுல , நான் நடந்துட்டு இருந்தேன், அந்த சாலைல எனக்கு பழகின இடங்கள் இருந்தது. ஆனா அந்த சாலைல நான் வெவ்வேறு ஊர்கள்ல பார்த்த இடங்கள் சேர்ந்து ஒரே ரோட்ல இருந்துச்சு.கொஞ்சம் தூரமா நிறைய பசங்க விளையாடிட்டு இருந்தாங்க. நான் அவங்கள கடந்து போயிட்டேன். அப்போ என் மேல் யாரோ கை வைச்சாங்க. நான் திரும்பி பார்க்கவும் அவன் டேய்ய் ரமேஷுசுநு கத்தினான். அவன் ஏன் குழந்தை காலத்து வினோத். ஆனா அவன் இன்னும் குழந்தை பருவத்துல இருந்தான். அவனோட கைய நான் பிடிச்சுகிட்டேன். அவனோட கைகள் ஒரு குழந்தையோட கைகள் மாதிரி இருந்துச்சு. அவனோட கை ரொம்ப வலு இல்லாம இருந்தது எனக்கு தெரிஞ்சது. இருபத்தி இரண்டு வயசான எனக்கு அவன் நிலைமை புரிஞ்சது. அவன் இப்போ தான் கோலி குண்டு விளையாடிட்டு இருக்கான். அவனுக்கு இப்போ தான் அந்த விளையாட்டு புரிஞ்சி இருக்கும் . ஆனா அவனுக்கு என்ன பார்த்த சந்தோசம். எனக்கும் அவன பார்த்த சந்தோசம். ஆனா அவன் நிலமைய பார்த்த எனக்கு மனசு ரொம்ப கஷ்டமா இருந்தது. அவன் என் தொல்பட்டைல கைய வைச்சுகிட்டு குதுச்சுகிட்டே எப்படிடா இருக்க , இப்போ எங்க இருக்க , இப்போ எந்த ஸ்கூல்ல படிக்குறநு கேட்டுட்டே இருந்தான். எனக்கு பேச வாய் வரல. நான் அவன் கைய பிடிச்சுகிட்டேன். நான் நல்லா இருக்கேன் , நீ எப்படி இருக்கு கேட்டேன். அவன் இப்போ எட்டாம் கிளாஸ் படிக்குறான். அவன் என் உயரம் இருந்தான். அதுக்குள்ள அவனோட அம்மா அவன கூப்பிட்டாங்க . உண்மையல அவன் என்கிட்ட பேசுறத பாத்துட்டு அவன் யாரோடும் பேசி சண்ட போட்டுடுவான் பயந்து அவன கூப்பிடாங்க. அது அவங்க முகத்துல தெரிஞ்சது. வினோத் , அவங்க அம்மாகிட்ட , ரமேசுமா ரமேசுமா அப்படின்னு சொன்னான். அவங்க அம்மாக்கு என்ன அடியாளம் தெரியல. அம்மா அடிப்பாங்க நான் போறேன்னு சொல்லிடு ஓடிட்டான்.

அப்போ எனக்கு முழிப்பு வந்த்துருச்சு. உண்மைல வினோத் இப்போ இப்படி தான் இருப்பானா? இப்போ அவன் எங்க இருப்பான்னு சரியா சொல்ல முடியாது. அவங்க அப்பா இப்போ -ரிட்டையர்ட்டு ஆகி இருக்கலாம். அவன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கனும்

ஒருவேளை அவன் நான் கனவு கண்ட மாதிரி இருந்தானா,

எல்லோர் வாழ்க்கைலயும குழந்தை பருவத்துல தான் சந்தோசமா இருப்பாங்க , ஆனா வினோத்துக்கு அவனோட குழந்தை பருவம் ரொம்ப நாள் கிடைச்சுருக்கும ,நம்ம பார்த்த வலி ,சோகம், சேர்த்த வஞ்சம், கோபம் , நம்ம மனசுல இருக்க அழுக்கு அவன் மனசுல கட்டாயம் இருக்காது இல்ல. நம்ம பார்த்த சந்தோசம் அவன் பார்த்து இருக்கமட்டான்ல. ஆனாலும் நம்மள விட அவன் ரொம்ப சந்தோசமா இருப்பான். இருக்கனும்.

வினோத், எங்க இருந்தாலும் நல்லா இரு. சந்தோசமா இரு. பாதுகாப்பா இரு. இன்னைக்கு கனவுல நீ வந்தா நாம ரொம்ப நேரம் பேசலாம் சரியா.

இப்படிக்கு ,

ரமேஷ்.